Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர்-ஏ.பி.டி. சாலையில், பழைய துணிகளை பிரிக்கும் குடோன் ஒன்றில் வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சம்சுதீன்(வயது 23) என்பதும், பணத்தகராறு தொடர்பாக அவரது நண்பர்களே சம்சுதீனை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் சம்சுதீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஊரடங்கு விதிகளை மீறி சம்சுதீனின் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் திருப்பூர் மாநகரின பிரதான சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று உடலை அடக்கம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.